உயர்தரப் பரீட்சையில் 6468 மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/01/exam-626x380-2.jpg)
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 6468 பாடசாலை பரீட்சார்த்திகள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
நூற்றுக்கு 3.5 வீதமான மாணவ மாணவியர் உயர்தரப் பரீட்சையில் இம்முறை மூன்று ஏ சித்திகளை பெற்றுக்கொண்டுள்ளனர். உயர்தரப் பரீட்சையில் 134238 பாடசாலை பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளதாகவும் இது 63.36 வீதம் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரியல் விஞ்ஞான பிரிவில் 457 பரீட்சார்த்திகள் மூன்று ஏ சித்திகளையும் கணித பிரிவில் 603 பரீட்சார்த்திகள் மூன்று ஏ சித்திகளையும் வர்த்தகப் பிரிவில் 3835 பரீட்சார்த்திகள் மூன்று ஏ சித்திகளையும் கலைப் பிரிவில் 1557 பரீட்சார்த்திகள் மூன்று ஏ சித்திகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
Related posts:
சிறு கடற்றொழிலாழர்களது வாழ்வாதார நிலைமை கருதி கடலட்டைப் பண்ணைத் தொழிலுக்கு தடை - வேலணை பிரதேச சபையில...
ஏப்ரல் 2, 3, 6ஆம் திகதிகளில் சகல மருந்தகங்களைத் திறக்க அனுமதி - சுகாதார அமைச்சு!
உடைந்துபோயுள்ள பொருளாதாரத்தையும் நம்பிக்கையிழந்துள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் கட்டியெழுப்புவதே ...
|
|