இந்திய பிரதமரிடம் பல கோரிக்கைகளை முன்வைக்கவுளோம் – கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/05/C_i_0biVoAEPgOe.jpg)
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேலும் 25000 வீடுகள் உட்பட பல கோரிக்கைகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.இந்திய பிரதமர் நாளை மலையகத்திற்கு வருகை தரவுள்ள நிலையில், அவரை தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.இதன்போது மோடியிடம் வீடமைப்பு, கல்வி அபிவிருத்திக்காக தமிழகத்தில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்தல், மலையகத்திற்கு பல்கலைக்கழக வளாகம் ஒன்றை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாகவும் கல்வி ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை வருகிறார் அமெரிக்க துணை உதவி செயலாளர்!
அடுத்த மூன்று வாரங்கள் ஆபத்தானவை – இராணுவத் தளபதி எச்சரிக்கை!
உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்!
|
|