அமரவீரவின் வீட்டைத் தட்டிய அமைச்சர்கள்

Monday, May 8th, 2017

ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சியின் ஆட்சியை உருவாக்குதல், தொடர்பில் விரைவான வேலைத் திட்டமொன்றை முன்னெடுத்தல், அமைச்சரவை மாற்றத்தை தாமதமின்றி முன்னெடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் அமைச்சர்களான ஜோன் செனிவிரட்ண, நிமால் சிறிபால டி சில்வா, அனுரபிரியதர்சனயாப்பா, தயாசிறி ஜயசேகர,சுசில் பிரேம் ஜெயந்த,சந்திமவீரக்கொடி ஆகியோர் கடந்த 6 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீரவின் வீட்டில் சந்தித்துகலந்துரையாடியுள்ளனர் எனதெரிய வருகின்றது.

இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களை மகிந்த அமரவீர ஏற்றுக்கொண்டதாகவும், இதனடிப்படையில் இன்று இக்குழுவினர் ஜனாதிபதியைச் சந்தித்து தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Related posts:


நாடு தொடர்பிலான கரிசனையுடன் ஒட்டுமொத்த மக்களும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க ...
கரவெட்டி தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களது தகவல்களை தருமாறு பணிப்பாளர் கேதீஸ்வரன் வசர வேண்டுகோள்...
உலகில் அதிகமாக விஷத்தை உண்ணும் நாடு இலங்கை - விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய எச்சரிக்கை!