தெல்லிப்பளையில் 16 வயது பாடசாலை மாணவி துாக்கில் தொங்கி தற்கொலை !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/09/1697850629878701Untitled.jpg)
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை – நகுலேஸ்வரம் பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையிலுள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவி என தெரியவந்துள்ளது.
அவர் தற்கொலை செய்து கொள்ளும் போது வீட்டில் அவரது பெற்றோர் இல்லை என காவற்துறை தெரிவித்துள்ளது. மன உளைச்சல் காரணமாக குறித்த மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவற்துறை சந்தேகிக்கிறது.எனினும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதம் ஒன்றை காவற்துறை கைப்பற்றியுள்ளது.
Related posts:
கண்டி வைத்தியசாலைக்கு கொழும்பிலிருந்து விசேட வைத்திய குழு!
21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும்போது பட்டதாரி பயிலுனர்கள் பணிக்கு சமுகமளிக்க வேண்டும் - பொது நிர்...
ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம்முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை -...
|
|