புதிதாக நிறைவேற்றப்படவுள்ள கடற்றொழில் சட்ட வரைபை இறுதி செய்வதற்கான தெளிவூட்டல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/12/Untitled-1-copy-2.jpg)
புதிதாக நிறைவேற்றப்படவுள்ள கடற்றொழில் சட்டம் தொடர்பான வரைபை இறுதி செய்வதற்கான தெளிவூட்டல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் இடம்பெற்று்ள்ளது
கடற்றொழில் அமைச்சினால் புதிதாக நிறைவேற்றப்படவுள்ள கடற்றொழில் சட்டம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் மற்றும் திருத்தங்களை பரிசீலனை செய்வதுடன், சட்ட வரைபை இறுதி செய்வதற்கான தெளிவூட்டல் தொடர்பானதுமான கலந்துரையாடலே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளர், கடற்றொழில் இராஜாங்க அமைச்சரின் செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர்கள், அமைச்சின் சட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வரிச் சுமைகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை - கனேடிய உயர் ஸ்தானிகருக்கு எடு்துரைத்த...
கடல்சார் சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த 24 மணிநேர பொறிமுறை - அமைச்சர் டக்ளஸ் நடவடி...
|
|