நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளில் மாற்றம் – சபாநாயகர்!
Thursday, January 5th, 2017
நாடாளுமன்ற விதிகள் மற்றும் நிலையிற் கட்டளைகளில் 2017ஆம் ஆண்டில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக சபாநாகயர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக 2017ஆம் ஆண்டில் அரசாங்கம் புதிய ஆரம்பங்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.
மேலும் தகவலறியும் உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியமை, சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியமை மற்றும் மேற்பார்வை குழுக்கள் ஊடாக நாடாளுமன்றம் சக்திப்படுத்தப்பட்டமை முதலான பணிகள் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது!
நாட்டில் புகைப்பழக்கம் 14 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது!
தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு!
|
|
|
மக்கள் அச்சமடைய தேவையில்லை. எனினும், விழிப்புடன் இருப்பது அவசியம் - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர...
அரச சேவையின் செலவீனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலை...
பரிசூதிய சீட்டுக்களின் விலையை அதிகரிக்க தீர்மானம் - திறைசேரியின் அனுமயும் கிடைத்துள்ளதாக தேசிய லொத்த...


