பூநகரிப் பிரதேசத்தில் கால்நடையை கட்டுப்படுத்த கோரிக்கை!
Friday, November 4th, 2016
கிளிநொச்சி பூநகரிப் பிரதெசத்தில் கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூநகரி பிரதேசத்தில் தற்போது காலபோக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள பயிர்ச் செய்கைகளை கட்டாக்காலிகளாகத் திரியும் கால்நடைகள் அழித்து வருகின்றன. எனவே இவ்வாறு கட்டாக்காலிகளாகத் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்தி தமது பயிர்ச்செய்கைகளை பாதுகாக்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்குமாறு இப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts:
பஸ் மீது தாக்குதல்: கைதானோருக்கு மறியல்!
தொண்டராசிரியர்களுக்கான கலந்துரையாடல் நாளை!
இலங்கைக்கு ஆயிரத்து 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்குகிறது சீனா!
|
|
|


