இலங்கைக்கு ஆயிரத்து 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்குகிறது சீனா!
Saturday, February 6th, 2021
சீனாவின் மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கிக்கு ஆயிரத்து 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க தீர்மானித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி கையிருப்பு தட்டுப்பாட்டை முகாமைத்துவம் செய்வதற்காக குறுகிய காலத்தில் மீள செலுத்தும் வகையில் இந்த கடன் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிடம் குறுகிய காலத்தில் செலுத்தம் அடிப்படையில் பெற்றுக்கொண்ட 400 மில்லியன் டொலர்களை அரசாங்கம் திருப்பி செலுத்தியிருந்தது. இந்நிலைமையில் ஏற்பட்ட அந்நிய செலாவணியை கையிருப்பு தட்டுப்பாடானது, சீனாவின் ஆயிரத்து 500 மில்லியன் டொலர் கடன் மூலம் ஈடு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தென்மராட்சியில் மீண்டும் தலைதூக்குகிறது டெங்கு!
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இடையிலான சந்திப்பு !
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு : துரித கதியில் முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை!
|
|
|


