உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 51 சதவீதம் நிறைவடைவு – அஞ்சல் திணைக்களம் !
Tuesday, September 10th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 51 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அஞ்சல் திணைக்களத்தின் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் 14 ஆம் திகதியும் விசேட தினமாக அறிவிக்கப்பட்டு வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெறும் என பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்
000
Related posts:
முடிவுக்கு வந்தது பட்டதாரிகள் போராட்டம்!
குடாநாட்டில் மரவள்ளிக்கு பெரும் கிராக்கி!
செப்டெம்பர் 20 முதல் சர்வதேச புத்தக கண்காட்சி!
|
|
|


