முன்பள்ளி ஆசிரியர்களின் வெற்றிங்களை நிரப்ப நடவடிக்கை !
Wednesday, March 28th, 2018
வடக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் கீழ் உள்ள முன்பள்ளிகளின் ஆசிரியர்களின் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்குமாகாண உள்ளூராட்சி சபைகளின் கீழ் 40 க்கும் அதிகமான முன்பள்ளி ஆசிரிய வெற்றிடங்கள் உள்ளன இதனை நிரப்புவதற்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு விண்ணப்பங்கள் கோரியுள்ளது ஜி.சி.ஈசாதாரண தர சித்தியுடன் முன்பள்ளி டிப்ளோமாவை முழுமை செய்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் போட்டிப் பரீட்சையின் மூலம் ஆசிரியர்கள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளன தற்போது ஏனைய முன்பள்ளி ஆசிரியர்கள் அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டு 6 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த நிரந்தர நியமனங்கள் மூலம் முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது
Related posts:
பேருந்து விபத்து: 18 பேர் வைத்தியசாலையில்!
தற்போதுள்ள நிலை தொடர்ந்தால் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது – அனைத்தும் மக்களின் கைகளில் ...
தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் இல்லாமல் நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலை குறித்து சிந்திக்க வ...
|
|
|


