யாழ்ப்பாணம் வருகைதந்தார் ஜனாதிபதி ரணில் – சிறப்பு வரவேற்பளித்து வரவேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 24th, 2024

வடமாகாணத்திற்கான   விஜயத்தினை மேற்கொண்டு வருகை தந்துள்ள ஜனாதாபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று முற்பகல் யாழ்ப்பாணம் வருகைதந்தார்.

வடக்கிற்கான 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி  இன்று முற்பகல் கொழும்பிலிருந்து  யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.

பலாலி விமான நிலையத்திலிருந்தி உலங்குவானூர்தியில் யாழ் மத்தியகல்லூரி மைதானத்தை வந்தடைந்த ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பளித்திருந்தார்.
000

Related posts:

காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்ட வேலணை சிற்பனை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர...
இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜெ சங் - அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – சமகால அரசியல் நில...
சர்வதேச கடற்றொழிலாளர் தினம் யாழ்ப்பாணத்தில் - அமைச்சின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்...

எமது மக்கள் நான் பயணிக்கும் பாதையை பலப்படுத்துவார்களாயின்தமிழ் மக்களின் எதிர்காலத்தை வெற்றிகொண்டு சா...
2 இலட்சம் பயனாளர்களை தெரிவு செய்யும் தேசிய வேலைத் திட்டம் – மன்னார் மாவட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் டக...
வலி வடக்கில் விடுவிக்கப்படாது மீதமிருக்கும் காணிகளும் விடுவிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு...