விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – 10 வீத கழிவு முறைமையை இல்லாதொழிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
Friday, July 14th, 2023
……..
யாழ் மாவட்டத்தினை சேர்ந்த கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கலத்துரையாடலில், விவசாயிகளிடம் இருந்து சந்தை வியாபாரிகளினால் அறவிடப்படுகின்ற விவசாய உற்பத்திகளின் ஒவ்வொரு 10 கிலோவிற்கும் ஒரு கிலோகிராம் கழிவு முறைமையினை இல்லாமல் செய்வது உட்பட பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.
விவசாயிகளின் ஆதங்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நியாயமான விலை கிடைக்கும் வகையில் சந்தை செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். – 14.07.2023
Related posts:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த வடமேல் மாகாண “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்...
மீன்பிடித் துறைமுகங்களுக்கு நவீனப்படுத்த இந்திய தனியார் முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரை...
தமிழ் தரப்பினரிடம் ஜனாதிபதி ரணில் வெளிப்படுத்திய திட்டத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு - அமைச்சர் டக்ள...
|
|
|


