மீன்பிடித் துறைமுகங்களுக்கு நவீனப்படுத்த இந்திய தனியார் முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!
Tuesday, February 28th, 2023
நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற மீன்பிடித் துறைமுகங்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை உள்ளீர்த்து, விருத்தி செய்வது தொடர்பாக இந்திய தனியார் முதலீட்டாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில், இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் கலந்து கொண்டிருந்தார்.
இதனிடையே இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இடத்தில் தனியார் நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டு வந்த கப்பல் திருத்தும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். – 28.02.2023
Related posts:
இனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் அமைய வேண்டும்! - ...
சம்பூர் மின் உற்பத்தி நிலையம் இணக்க அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்? - ஈ. பி. டி. பி.
யுத்தத்தால் இந்தியா சென்று மீளவும் இலங்கை திரும்பும் அகதிகளின் வாழ்வியல் நிலை தொடர்பில் ஏதேனும் ஏற்ப...
|
|
|


