அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைவடையும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
Saturday, August 6th, 2022
பருப்பு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 20% முதல் 25% வரை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியதை தொடர்ந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு பாரியளவில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் குறைக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனடிப்டபடையில் 1 கிலோ பருப்பின் விலை சுமார் 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் படுகொலை!
யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை
கடன் பிரச்சினைகள் குறித்து ஜி 20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் விவாதிப்பர் - இந்திய அதிகாரிகள் தெரிவிப்...
|
|
|


