வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!
Wednesday, December 8th, 2021
இவ்வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சராசரியாக, ஒவ்வொரு வருடமும் 200,000 க்கும் அதிகமான இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
எனினும், கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 53,000 ஆகக் குறைவடைந்திருந்தது. கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரிசி விற்பனையில் மோசடி: முறைப்பாடு செய்ய தொடர்பிலக்கம் !
காலி மாவட்டத்தை ஆட்டம் காண செய்யவுள்ள கீதாவிவுக்கான தீர்ப்பு!
அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழவில்லை - எதிர்க் கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களால் அரசை ஒருபோதும் கவி...
|
|
|


