காலி மாவட்டத்தை ஆட்டம் காண செய்யவுள்ள கீதாவிவுக்கான தீர்ப்பு!
Monday, November 6th, 2017
இரட்டைக் குடியுரிமைக் உடையவர் என்ற அடிப்படையில் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுபபினர் பதவியில் தொடர முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த தீர்ப்பானது, காலி மாவட்டத்தில் இருந்து தெரிவான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது.
கீதாகுமாரசிங்க இரட்டைக் குடியுரிமைக் கொண்டவர் என்பதால், அவரை வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கியமை அரசியல்யாப்பு மீறலாகும். எனவே காலி மாவட்டத்துக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எவ்வாறாயினும், காலியில் மாவட்டத்திற்கு மாத்திரம் இடைத்தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோரி, வழக்கு தொடர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நூலக தகவல் விஞ்ஞான டிப்ளோமா கற்கை நெறி!
இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோர முடியாது? - பிரித்தானியா!
புதிய நேர அட்டவணையில் இயங்கும் நயினாதீவு - குறிகட்டுவான் படகு சேவை !
|
|
|


