14 நாட்களுக்கு அதிகமான காலப்பகுதிவரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதி மக்களுக்கு 6 மாத காலங்களுக்கு மின்சார கட்டணச் சலுகை!
Tuesday, January 19th, 2021
14 நாட்களுக்கு அதிகமான காலப்பகுதிவரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு சலுகை காலத்தினை வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பத்திரத்திற்கே இன்றையதினம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 6 மாதங்கள் வரை சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்.மாவட்டத்தின் சில இடங்களில் நாளை மின்தடை !
கிளிநொச்சியில் 20 வயது இளைஞரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி!
தொடரும் சீரற்ற காலநிலை - மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!
|
|
|


