தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் ஒத்திகை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது!
Tuesday, June 23rd, 2020
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் ஒத்திகை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஒத்திகை ஆரம்பமானது.
இந்த வாக்கு எண்ணும் ஒத்திகை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறுகின்றது.
கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார அமைச்சின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பொதுத் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணியை முன்னெடுப்பது தொடர்பில் அவதாகிக்கவே இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை, வாக்கெடுப்பு ஒத்திகை கடந்த வாரம் நாவந்துறை பாடசாலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
துன்னாலையில் கோஷ்டி மோதல்! நால்வர் வைத்தியசாலையில்!
திருமலையில் பரவிவரும் டெங்கு: கட்டுப்படுத்த துரித நடவடிக்கை!
பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர்கள் இலங்கை வருகை!
|
|
|


