ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் சீன ஜனாதிபதி!
Monday, June 24th, 2019
அடுத்த வாரம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் (Xi Jinping) கலந்து கொள்வார் என சீன அரச செய்தி ஸ்தாபனம் சின்ஹூவா தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 27 முதல் 29 ஆம் திகதிவரை ஜப்பானின் ஒசாக்கா நகரில் நடைபெறும் உச்சி மாநாட்டிற்காக செல்லும் சீன ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து உரையாடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க-சீன வர்த்தக நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
துருக்கிய பிரதமர் பதவி விலக தீர்மானம்!
வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு – மாலியில் சம்பவம்!
நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு – திணறும் இந்திய தேசம்!
|
|
|


