பொலிஸார் மீது தாக்குதல் : யாழ்ப்பாணத்தில் சம்பவம்!
Wednesday, August 29th, 2018
மணியந்தோட்டம் பகுதியில் நடமாடும் பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த சிலரே பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முச்சக்கரவண்டியை இடைமறித்து விசாரித்தவேளையிலேயே பொலிஸார் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது படுகாயமடைந்த ஒரு பொலிஸ் அதிகாரி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு பொலிஸாரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊழல் விசாரணைகளை தடுக்க எவரும் முயற்சிக்க வேண்டாம்- லக்ஷ்மன் யாப்பா!
மறுக்கப்பட்ட காசோலையை வழங்கிய நபரை எச்சரித்த சாவகச்சேரி நீதிமன்று பணத்தை உடன் வழங்கவும் உத்தரவு!
கட்டணப்பட்டியல் வழங்கப்படாமையால் கிளிநொச்சி மின்பாவனையாளர்கள் சிரமமம்!
|
|
|


