ஊழல் விசாரணைகளை தடுக்க எவரும் முயற்சிக்க வேண்டாம்- லக்ஷ்மன் யாப்பா!
Thursday, January 26th, 2017
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விசாரணைகளை தடுக்க எவரும் முயற்சிக்க வேண்டாம் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து இந்த விசாரணைகளை முன்னெடுக்க வரும் நிலையில் இந்த விசாரணைகளை குழப்ப எவரும் முயற்சிக்க வேண்டாம். ஜனாதிபதி மிகவும் உறுதியான நிலைப்பதில் இருந்து இந்த விடயத்தை கையாண்டு வருகின்றார். ஆகவே அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார். நிதி அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts:
வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் !
22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் ஆரம்பம்!
மீண்டும் யாழ் வந்த புகையிரதம்!
|
|
|


