இலங்கையில் வைத்து சீன பிரஜை ஒருவர் கைது!
Thursday, March 29th, 2018
சட்டவிரோதமான முறையில் சுமார் ஒரு கோடியே 40 இலட்சத்து 23 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணய தாள்கள் மற்றும் மாணிக்கக்கற்களை நாட்டிலிருந்து கொண்டு செல்லமுற்பட்ட சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நீர்கொழும்பு பிரதேசத்தில் சுற்றுலா விடுதியொன்றை நடாத்திச் செல்பவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
துபாய் நோக்கி பயணிக்க இருந்த அவரின் பயணப்பொதியை சோதனையிட்ட போது குறித்த பணத்தொகை மற்றும் மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்!
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு சுகாதார அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை - பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ...
ஜனவரியில் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
|
|
|


