வெற்றிலையை மென்றவாறு மீன் விற்றவருக்குத் தண்டம்!
Thursday, February 22nd, 2018
ஊர்காவற்றுறை மீன் சந்தையில் வெற்றிலை மென்றவாறு கடலுணவுகளை விற்பனை செய்த பெண்ணுக்கு 3 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்டார்.
ஊர்காவற்றுறை மீன்சந்தையில் வெற்றிலை மென்றவாறு கடலுணவுகளை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவருக்கு எதிராகப் பொது சுகாதாரப் பரிசோதகர் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னணியில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது.
பெண் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரை எச்சரித்த நீதிவான், 3 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து உத்தரவிட்டார்.
Related posts:
பொறுப்பேற்கப்படாதுள்ள வாகன இலக்கத்தகடுகள்!
முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்கள் வருகை அதிகரிப்பு!
முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் – குடிவரவு மற்றும் குடியகல...
|
|
|


