யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகம்!
Sunday, February 12th, 2017
இவ்வாண்டில், கடந்த 40 தினங்களில் பத்தாயிரம் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதில் யாழ் மாவட்டமும் உள்ளடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
டெங்கு ஆட்கொல்லி 12 பேரின் உயிர்களை பலி கொண்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாகும்.
கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 170 பாடசாலைகளை சோதனையிட்ட போது, 102 பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் சூழல் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts:
கைவிடப்பட்டது போராட்டம் !
கர்ப்பிணி தாய்மாருக்கு போஷாக்கு பொதிகளை வழங்கினார் ஜனாதிபதி
யாழ்ப்பாணத்திலும் தீவிரமடையும் கொரோனா - 10 வயது சிறுமியும் பாதிப்பு – வடக்கின் பல பகுதிகளிலும் எச்ச...
|
|
|


