ரொஹிங்கிய அகதிகள் மீது தாக்குதல்; அமைச்சர் மங்கள சமரவீர கண்டனம்!
Thursday, September 28th, 2017
ரொஹிங்கிய அகதிகள் மீது கல்கிசைப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பத்தை அமைச்சர் மங்கள சமரவீர வன்மையாக கண்டித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமைச்சர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் கண்காணிப்பில் இருந்த அகதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பௌத்த மதத்தையும் நிந்திக்கும் செயலாகும் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்க எதிராக பொலிசார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
யாழ். இந்துவின் கௌரவத்தை கெடுக்க அனுமதிக்க முடியாது! - நீதிபதி இளஞ்செழியன்
நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சமுர்த்தி பயனாளர்களுக்கு மேலும் 10 ஆயிரம் வரை கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது!
|
|
|


