யாழ். பல்கலைக்கழக பிரதான உணவகங்கள் இரண்டுக்கும் சீல்!
Thursday, August 24th, 2017
யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான உணவகங்கள் இரண்டையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு யாழ். குருநகரிலுள்ள சிறுவர் நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை(24) உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய மேற்பட உணவகங்கள் இரண்டும் இன்று பிற்பகல் பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகங்களில் பழுதடைந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை மற்றும் உணவகங்களில் வேலை செய்தவர்கள் சுகாதார விதிமுறைகளுக்கு மாறாகக் காணப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யாழ்.பல்கலைக் கழகத்துக்குப் பொறுப்பாகவுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கமையவே உணவகங்கள் இரண்டும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மார்ச் மாதம் வரை மழை இல்லை: மூன்று மாதங்களுக்கே குடிநீரை விநியோகிக்க முடியும் - நீர் வழங்கல் வடிகாலம...
இலங்கையில் பொருளாதார சவால்களைத் தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் வெளிவிவகார...
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் - வர்த்தமானி வெளியானது!
|
|
|
ஏற்றத்தாழ்வுகளை குறைத்து அனைத்து மக்களுக்கும் சமமான நகர வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் – பிரதமர் தெர...
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டு - குற்றச்சாட்டில் கைதான மூவரையும் விளக்கமறியல...
தேங்காய் விலை அதிகரிப்பு - பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் பல - தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர்!...


