பரீட்சைகளின் போது முஸ்லிம் மாணவிகளின் உடைக்கு தடை!
Thursday, August 10th, 2017
பரீட்சைகளின் போது முகத்தினை முழுமையாக அல்லது கண்களை திறந்து முகமூடல் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில பரீட்சாத்திகள் குறித்த முகமூடிகளை அணிந்து அதனுள் மைக்ரோ தொலைபேசிகள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பக் கருவிகளை மறைத்து வைத்திருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இராஜாங்க கல்வியமைச்சர் ராதா கிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், முகமூடிய நிலையில் பரீட்சை எழுதும் பரீட்சாத்திகளது உண்மை நிலை கண்டறிவதில் சிக்கல் உள்ளதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் குறித்த சிக்கல்களை கருத்திற் கொண்டே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்
Related posts:
புதிய அரசியல் அமைப்பு திருத்த உப குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேர் விலகல்!
அரசபணிகளுக்கு பயன்படுத்தப்படும் காகிதாதிகளை குறைக்க நடவடிக்கை - அமைச்சர் வஜிர அபேவர்த்தன!
பல்வேறு அரச தரப்புக்களை சந்திக்க தயாராகும் இலங்’கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!
|
|
|


