புதிய அரசியல் அமைப்பு திருத்த உப குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேர் விலகல்!
Friday, February 17th, 2017
புதிய அரசியல் அமைப்பு திருத்த உப குழுவில் இருந்து ஒன்றிணைந்த எதிர்க் கட்சி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நானயக்கார, பந்துல குணவர்தன,கெஹெலிய ரம்புக்வெல்ல,தாரக பாலசூரிய,விதுர விக்கிரமநாயக்க மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோரே குறித்த குழுவிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts:
நாட்டில் 200 வீதத்தினால் மருந்துப் பொருட்களின் விலைகள் உயர்வு!
உயரம் குறைந்தமையினால் தாதியர் சேவையில் இணைந்து கொள்ள முடியாத பரிதாபம்!
வற் வரி அறவிடாமல் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP - கவனம் செலுத்துவதாக அ...
|
|
|


