கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் மாநாடு கொழும்பில்!

Tuesday, July 25th, 2017

ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் 17வது கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.

கொழும்பில் ஆரம்பமான இந்த நிகழ்வில் ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எரீவன் ஹெவொரன்சியினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

இந்த மாநாட்டில் ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் மற்றும்; சர்வதேச பிராந்திய உறுப்பினர்கள், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பணிப்பாளர் நாயகம் கிங்ஸ்லி பெர்னாண்டோ, கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் மாநாட்டின் தலைவர் செய்ஜி டகாஜி, ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் பிரதி பொதுச் செயலாளர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts:


மன்னார் மாவட்டத்திற்கு வரும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பாஸ் வழங்கப்படாது- அரசாங்க அதிபர் தெ...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட பாடத்திட்டங்கள் தொடர்பிலான அறிக்கையை ...
இலங்கை – இந்தியா இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து - இந்திய வெளிவிவகார அமைச்சர் தெர...