டெங்கு ஒழிப்பை கண்காணிப்பதற்கு விசேட அதிகாரி !
Wednesday, July 19th, 2017
டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அஜித் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையிலான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார குறிப்பிட்டார். இந்த நடவடிக்கையின் பயனாக டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் டொக்டர் ஜயசுந்தர பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நோபல் பரிசு பெற்ற திரைப்படக் கதாசிரியர் டேரியோ போ காலமானார்!
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு!
சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றமை தொடர்பில் ஆராய விசேட நடவடிக்கைகள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு ...
|
|
|


