நோபல் பரிசு பெற்ற திரைப்படக் கதாசிரியர் டேரியோ போ காலமானார்!
Friday, October 14th, 2016
நோபல் பரிசு பெற்ற இத்தாலிய திரைப்பட கதாசிரியர் டேரியோ போ இன்று காலமானார்.இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பெற்ற திரைப்பட கதாசிரியர் மற்றும் நடிகராவார். இறக்கும் போது இவருக்கு 90 வயது.
டேரியோ போவின் மறைவினால் திரைப்படம், கலாசாரம் மற்றும் பொது வாழ்வில் சிறந்த நபர்களில் ஒருவரை நாடு இழந்துள்ளதாக இத்தாலி நாட்டின் பிரதமர் மேட்டியோ ரென்ஜி தெரிவித்துள்ளார்.
20ம் நூற்றாண்டில் தலைசிறந்த கேலிப்பேச்சு மற்றும் அரசியல் நையாண்டித்தனத்தில் போ சிறந்தவராவார். இவரது ஆக்சிடெண்டல், டெத் ஆம் ஆன் அனார்கிஸ்ட் மற்றும் கான்ட் பே, வோன்ட் பே ஆகியன இவரது படைப்புக்களில் பிரபலமடைந்தவை ஆகும். 1969ம் ஆண்டில் தொலைக்காட்சியில் வெளியான மிஸ்மெரோ பஃபோ (நகைச்சுவையான மர்மம்) என்ற போவின் திரைக்கதை படைப்பு சர்ச்சையை எழுப்பியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts:
தேவையான நிவாரணங்களை வழங்க அவசர பிரிவு – வெளிவிவகார அமைச்சு!
விரைவில் உள்ளுராட்சி தேர்தல் - அமைச்சர் முஸ்தபா!
நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்வோம் – இதுவே எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழியாகும் – பிரத...
|
|
|
பிரதமர் தொடர்பில் முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம் – எதிர்க்கட்சி தலைவருக்டகு சுட்டிக்காட்டிய நீதி அமைச...
நாடு முழுவதும் வழமைக்கு திரும்பியது போக்குவரத்து சேவைகள் - வழமையான நேரங்களுக்கு அமைய நாளைமுதல் புகைய...
இணையவழி பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை நிராகரித்தது உய...


