தொழுநோயை கட்டுப்படுத்த புதிய பிரிவு!
Saturday, May 14th, 2016
தொழுநோய் கட்டுப்பாடு தொடர்பாக புதிய பிரிவொன்றை அமைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளடக்கி புதிய பிரிவை மாவட்ட மட்டத்தில் அமைப்பதுடன், இங்கிலாந்து தொழுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆதவரை இதற்கு பெற்றுகொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந் நாட்டு மருந்து ஒழுங்குமுறை ஆணையகம் தொடர்பாக வெளிநாடுகள் குற்றம் சாட்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். மருந்துகள் பதிவு செய்தல் தொடர்பாக அதில் மாபியா ஒன்று செயல்படுவதாக தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துவருவதாகவும் சுகாதார அமைச்சில் இடம்பெற்று விஷேட கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
.
Related posts:
பெறுமதியான பணத்தாள்களை துபாய்க்கு கடத்தும் முயற்சி தடுப்பு!
வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும் - யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்!
உயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
|
|
|


