ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிப்பு!

Tuesday, May 16th, 2017

சிவனொளிபாத மலை யாத்திரை இடம்பெற்ற கடந்த 6 மாத காலப்பகுதியில் சுமார் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் அம்பேகமுவ பிரதேசசபையால் சேகரிப்பட்டுள்ளன.

இம் முறை சிவனொளிபாத மலை யாத்திரை இடம்பெற்ற கடந்த 6 மாத காலப்பகுதியில் நல்லதண்ணி சிவனொளிபாதத்திற்கான பாதையினூடக யாத்திரையில் ஈடுபட்ட இலட்சக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு யாத்திரிகளினால் போடப்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள் சுமார் 10இலட்சத்திற்கு மேற்பட்டவை அம்பேகமுவ பிரதேசசபை கழிவுப்பொருட்களை சேகரிக்கும் பிரிவினால் சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேச சபையில் நல்லதண்ணி பகுதியில் உள்ள கழிவுப்பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ ஹமந்த தெரிவிக்கையில் நல்லதண்ணியிலிருந்து சிவனொளிபாத மலைவரையில் குளிர்பானப்போத்தல்கள் குடிநீர்ப்போத்தல்கள் வீசப்பட்டிருப்பதாக தெரிவித்தார்

Related posts: