இலங்கை பெட்மிண்டன் சங்கத்தின் பதிவு இரத்து!
Saturday, April 22nd, 2017
இலங்கை பெட்மிண்டன் சங்கத்தின் பதிவு உடனடியாக அமுலாகும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விஷேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கை பெட்மிண்டன் சங்கத்தின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அதிகாரமுள்ளவராக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை தற்காலிகமாக நியமிப்பதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் விரைவில் இலங்கை பெட்மிண்டன் சங்கத்திற்கான தேர்தலை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சுன்னாகம் பொலிஸ் நிலைய கைதி மரணம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!
தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைக்க 20 லட்சம் மோசடி!
அஞ்சல் நிலயங்களை மூடுவது உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
|
|
|


