தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைக்க 20 லட்சம் மோசடி!
Monday, January 16th, 2017
கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு 20 இலட்சம் ரூபாவரை மோசடியாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகள் குறித்து அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், இதுபோல் நாடுமுழுவதும் உள்ள நகரங்களின் பிரபல பாடசாலைகளின் அதிபர்களும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
பாவனை இன்றிக் காணப்படும் பால் சேகரிப்பு நிலையம்!
தொடரும் சீரற்ற வானிலையால் நாட்டில் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் - சுகாதார அமைச்சு...
மற்றுமொரு நிலக்கரி கப்பல் வரவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் அறிவிப்பு!
|
|
|


