மே மாதம் மருத்துவர்கள் நியமனம் – போதனா வைத்தியசாலைபணிப்பாளர்!
Wednesday, April 19th, 2017
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அடுத்த மாதமளவில் புதிதாக மருத்துவர்கள் நியமிக்கப் படவுள்ளனர். தற்போது நிலவும் நெருக்கடியை சமாளிக்க அவர்களின் நியமனம் உதவும் என்று போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நாளாந்தம் 800இற்கும் மேற்பட்டோர் வெளிநோயார் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.
அவர்களுக்கு சிகிச்சை வழங்க 18 மருத்துவர்கள் கடமையில் உள்ளனர். எனினும் நோயாளர் விடுதிகள் சிலவற்றுக்கு மருத்துவர்கள் பற்றாக்குறை காணப்படுன்.
இந்த நெருக்கடி நிலமை அடுத்தமாதம் புதிதாக நியமிக்கப்படும் மருத்துவர்களால் சீராக்கப்படும்” என்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
இன்று நள்ளிரவு வெளியாகிறது க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!
சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை நூற்றுக்கு 28 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை - நாளைமுதல் நடைமுறைப்படுத்த...
நாட்டில் துவிச்சக்கரவண்டிகளுக்கு பற்றாக்குறை - விலையும் பாரியளவில் உயர்வு!
|
|
|


