டெங்கு ஒழிப்பு : தென் மாகாணத்தில் வெற்றி!
Monday, April 10th, 2017
தென் மாகாணத்தில் தீவிரமாக பரவியிருந்த டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த மாகாண சுகாதார பணிப்பாளர் டீ.விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மாகாணத்தின் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்த முடிந்ததாகவும் சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாத காலப்பகுதியில் தென் மாகாணத்தில் மூவாயிரத்து 500 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். ஆனால் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஐந்து நோயாளிகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
Related posts:
போலி வைத்தியர் மாட்டினார்!
மருந்துகளுக்கான விலை குறைப்பு பொருத்தப்பாடுடையது அல்ல - நிசாந்த தசநாயக்க!
வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு - வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...
|
|
|


