தொடர்மாடி வீடுகளுக்கு தபால் பெட்டிகள் அவசியம்!
Friday, March 24th, 2017
தொடர்மாடி வீடுகளை நிர்மாணிக்கும் போது, கீழ் மாடியில் தபால் பெட்டிகளை கட்டாயமாக அமைக்க வேண்டும் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
தொடர்மாடி வீடுகளில் காணப்படும் தபால் சேவை குறைப்பாட்டை நிவர்த்திக்கும் நோக்கிலேயே தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீமினால் குறித்த இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
வீட்டின் இலக்கங்களின் அடிப்படையில் தபால் பெட்டிகளைக் கொண்ட பிரதேசமொன்றை கீழ் மாடியில் ஸ்தாபிப்பதற்கும், குறித்த பெட்டிகளின் திறப்புகளை குறித்த வீட்டு உரிமையாளர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
Related posts:
உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்!
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் - சுகாதார அமைச்சர் க...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் முதலாம் திகதிவரை நீடிப்பு!
|
|
|


