தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் முதலாம் திகதிவரை நீடிப்பு!
Friday, September 17th, 2021
நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தமது ட்விட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று கூடிய கொவிட்-19 தடுப்பு தேசிய செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக எதிர்வரும் 21 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது
Related posts:
குற்றவாளிகள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவர் - பொலிஸ்மா அதிபர்!
யாழ். பல்கலைக்கு விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டிடத்தொகுதி - அமைச்சர் கயந்த கருணா திலக!
விமானப்படைத் தளபதிக்கு கொரோனா!
|
|
|


