யாழில் கதலி வாழைப்பழ விலையில் உயர்வு

Thursday, March 23rd, 2017

யாழ். மாவட்டத்தில் கதலி வாழைப்பழத்தின் விலையில் திடீர் உயர்வு  ஏற்பட்டுள்ளது.

குடாநாட்டின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 60 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ள சூழலில் கடந்த இரு நாட்களாக ஒரு கிலோ வாழைப்பழம் நூறு ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
யாழில் பல்வேறு ஆலயங்களிலும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகியுள்ளமையும், பங்குனித் திங்கள் போன்ற இந்துக்களின் புனித விரத தினங்கள் ஆரம்பமாகியுள்ளமையுமே இந்தத் திடீர் விலை உயர்வுக்குக் காரணமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts:


கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: பாதீட்டு விவாதத்திற்கான நாட்களை குறைப்பது குறித்து அவதானம்!
கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அரிசியாக மாற்றி 29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ...
இந்த வருடம் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 9 இலட்சத்தை கடக்கும் என சுற்றுலா அபி...