பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயரும்!
Monday, January 23rd, 2017
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாகவே பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இந்த விடயத்தில் நிவாரணம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்ப்பதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts:
தொல்பொருள் தகவல் நிலைய நிர்மாணப்பணிகள் குறித்த கலந்துரையாடல்!
யாழ்.மாநகர சபைக்கு எதிராக போராட்டம்!
கணனி விளையாட்டுகளை தடை செய்ய கல்வி அமைச்சரிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!
|
|
|


