உயர் தரப் பெறுபேறுகளுடன் பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடும் வெளியிடப்படும்
Friday, January 6th, 2017
இம்முறை பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான கையேட்டை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுடன் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த நுழைவுக் கையெட்டை அச்சிடுவதற்காக தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்வதே இதன் நோக்கம் என தெரியவந்துள்ளது.

Related posts:
வங்காள விரிகுடாவில் “TITLI” என்ற பலமான சூறாவளி!
பங்களாதேஷ் பிரதமரின் அழைப்பை ஏற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளையதினம் பங்களாதேஷ் விஜயம்!
சீரற்ற காலநிலை - யாழ். மாவட்டத்தில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 298 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்த...
|
|
|


