சீரமைப்பு பணி: இரு மணி நேரம் தடைப்படும் 119 அழைப்பு !
Friday, January 6th, 2017
எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி பொலிஸ் அவசர அழைப்பு நிலையத்தில் இரு மணி நேர சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதால் பொலிஸ் அவசர அழைப்பு நிலைய வலையமைப்பின் நடவடிக்கைகள் இருமணி நேரம் தடைப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொலிஸ் அவசர அழைப்பு நிலைய தொலைபேசி வலையமைப்பில் அடிக்கடி ஏற்படும் கோளாறை சீர் செய்யும் நோக்கிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் எதிர்வரும் 09 ஆம் திகதி மு.ப. 04.00 மணி முதல் மு.ப. 06.00 மணி வரையான காலப் பகுதியில் பொலிஸ் அவசர அழைப்பு நிலைய வலையமைப்பின் புனரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கைதுசெய்யுமாறும் பொலிஸாருக்கு உத்த...
ஈரான் கோராத் தாண்டவம் - இஸ்ரேலின் முக்கிய தொழிற்துறை வலயத்தில் பாரிய தீப்பரவல்!
யாழ் பொலிசார் முன்னெடுத்த புதுவருட விளையாட்டு நிகழ்வுகள்!
|
|
|


