வீதி விபத்தில் இளைஞன் படுகாயம்!
Thursday, December 29th, 2016
வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் நீர்வேலிச்சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் நீர்வேலி தெற்கினை சேர்ந்த சிவலிங்கம் கஜேந்திரன் (வயது 25) என்ற இளைஞனே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பொலிஸில் முறையீட்டதையடுத்து தொடர்ந்து பொலிஸார்’ விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts:
மோட்டார்ச் சைக்கிளில் வேகமாக வந்தவர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்ற யுவதியை மோதிவிட்டுத் தப்பியோட்டம...
கடற்றொழிலாளர் பற்றிய முறையான தொகை மதிப்பீடு இந்த வருடத்தில் நடக்கும்!
சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான ஜுலை மாதத்த...
|
|
|


