மோட்டார்ச் சைக்கிளில் வேகமாக வந்தவர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்ற யுவதியை மோதிவிட்டுத் தப்பியோட்டம்!
Sunday, March 27th, 2016
மோட்டார்ச் சைக்கிளில் வேகமாக வந்த இனந் தெரியாதோர் துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இளம் யுவதியை மோதி வீட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று (26) இரவு7 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்துச் சம்பவத்தில் 25 வயதான யுவதி காலில் காயங்களுக்கு உள்ளானதுடன் அவர் செலுத்தி வந்த துவிச்சக்கர வண்டி கடுமையான சேதங்களுக்கு உள்ளானது.
சம்பவம் நடைபெற்ற பின்னர் அப் பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடிய போதும் சம்பவத்துக்குக் காரணமான மோட்டார்ச் சைக்கிள் செலுத்துனர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. விபத்துச் சம்பவத்தையடுத்துக் குறித்த யுவதி அழுதவாறு நின்ற நிலையில் பொதுமக்கள் அவரை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தேசிய பட்டியல் விபரத்தை 14 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்து கட்சிகளுக்கும்...
வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் 388 பேருக்கான நிரந்தர நியமனம் – அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு வ...
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்று!
|
|
|


