மணல் கட்டணம் 100 சதவீதம் அதிகரிப்பு!
Thursday, December 22nd, 2016
மணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அப்பணியகம் அறிவித்துள்ளது.
மணல் கியூப் ஒன்றின் அரச விலை விலையை 8 ஆயிரம் ரூபாய் வரையிலும் அதிகரித்து, அரச ஆதாய கட்டணமாக 320 ரூபாயாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தப் பணியகத்தின் தலைவர் கித்சிறி திஸாநாயக்க தெரிவித்தார்
மணல் கியூப் ஒன்றின் தற்போதைய அரச விலை 4 ஆயிரம் ரூபாவாகவும், அரச ஆதாய உரிமைக் கட்டணமாக 160 ரூபாவாகவும் காணப்படுவதாக குறிப்பிட்டார் அவர், இக்கட்டணமானது 2007ஆம் தொடக்கம் அமுலில் இருந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Related posts:
காக்கைதீவு மீன்சந்தையை அகற்ற முடிவு!
அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு கிடையாது -ஜனாதிபதி !
கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத இறைச்சி விற்பனை அதிகரிப்பு: பொதுமக்கள் குற்றச்சாட்டு !
|
|
|


