சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது!
Wednesday, December 21st, 2016
தலைமன்னார் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (21) கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பயன்படுத்திய 2 மீன்பிடி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்கள் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தில் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடனர். இதேவேளை நேற்று (20) நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் விண்ணப்பம் கோரல்!
யாழ்ப்பாணத்தில் இதுவரை 22 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு - மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ்!
சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
|
|
|


