மானிப்பாயில் 12 வீதிகள் அடுத்தாண்டு காப்பெற்றாகும்!
Thursday, December 15th, 2016
வலி.தென்மெற்கு மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட 12 வீதிகள் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியீட்டத்தில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் காப்பெற் வீதியாக சீரமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குழாய் – கல்வளை வீதி, பிரான்பற்று – பண்டத்தரிப்பு வீதி, அல்லுண்ணி வீதி, சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி – கம்மாவை வீதி, 1ஆம் 2ஆம் கயா வீதி, நவாலி தெற்கு ராஜராஜேஸ்வரி வீதி, மலைவேம்படி வீதி, சவாரி வீதி, மதவடி வீதி, செட்டியடைப்பு வீதி, சண்டிலிப்பாய் 5 கண்மதவடி வீதி, நாவாலி வடக்கு தலுவில் வீதி என்பனவே சீரமைக்கப்படவுள்ளன. வீதிகளின் சீரமைப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டப்பணிப்பாளரின் மேற்பார்வையில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts:
வேலையின்போது மயங்கி விழுந்து ஒருவர் மரணம் !
பல்கலைக்கழக நுழைவு வெட்டுப்புள்ளி வெளியானது!
புதுப்பிக்கத்தக்க சக்திக்கு இடமளிக்கும் திட்டங்களுக்கு மின்சார சபை அனுமதிக்கிறது - அமைச்சர் காஞ்சன வ...
|
|
|


