மத்திய வங்கியின் ஆளுனர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்?
Sunday, December 11th, 2016
மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் அரச நிதிச் சபையின் உறுப்பினர்களான நிஹால் பொன்சேகா மற்றும் கிரிசாந்த பெரேரா ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலைமையின் கீழ் பதவியை இராஜினாமா செய்ய விரும்புவதாக இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்எனினும் இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு பொருத்தமானவரா என ஆராய்ந்து நியமிக்கப்பட்டதாகவும் பதவி விலக வேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதி, மத்திய வங்கி ஆளுனருக்கு தெரிவித்துள்ளார்.நிதிச் சபை உறுப்பினர்களும் மத்திய வங்கியின் ஆளுனருடன் பதவி விலக விரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts:
பழமரங்களை தறிக்க அனுமதி பெறும் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் - ஜனாதிபதி!
மதங்களை மக்கள் புறக்கணிக்கின்னர் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
வடக்கு வைத்தியசாலைகளில் 52 கொவிட் உடலங்கள் : எரியூட்டுவதற்கு அனுராதபுரம் அனுப்ப ஏற்பாடு!
|
|
|


