மாகாணசபைகளுக்கான நிதி குறைக்கப்படவில்லை – நிதியமைச்சர்!
Tuesday, December 6th, 2016
2017ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் மாகாண சபைகளுக்கான நிதி குறைக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சில மாகாணசபை முதலமைச்சர்கள் சபைகளுக்கான வரவுசெலவுத்திட்ட நிதி குறைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் கூற்றுக்களின் எந்தவித உண்மையுமில்லை என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் சில துறைகளுக்காக இதுவரைகாலமும் மாகாணசபைகளுக்கென வழங்கப்பட்ட நிதி நடைமுறைக்கு பதிலாக சம்பந்தப்பட்ட அமைச்சிற்கு தேவையான நிதியுதவியை நேரடியாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். அரசாங்கம் மாகாணசபைகளுக்கு ஒதுக்கீடுசெய்யும் நிதியை வெளிநாட்டு பயணங்கள் போன்ற வீண்விரயங்களுக்கு பயன்படுத்துவதை தடுத்து பொதுமக்களுக்கு உரிய சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts:
எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டின் முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த எச்சரிக்கை அவசியம் – எச்சரிக...
திருநெல்வேலி - பாரதிபுரம் தொடர்ந்தும் அபாயத்தில்!
2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை - தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் டிசம்பர்...
|
|
|


